தேசிய அளவில் தரவரிசை புள்ளிகளுக்கான டென்னிஸ் தொடரை தமிழ் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், இண்டியம் நிறுவனம் இணைந்து நடத்தின. சென்னையில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு பாரா டென்னிஸ் பைனலில் கர்நாடகாவின் சேகர் வீராசாமி 6-1,6-4 என நேர் செட்களில் சக வீரர் கே.கார்த்திக்கை வீழ்த்தினார். மகளிர் பாரா டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவின் கே.பி.ஷில்பா 6-1,4-6,10-7 என்ற செட்களில் சக வீராங்கனை பிரதிமா ராவை வீழ்த்தினார்.
மகளிர் ஒற்றையர் பைனலில் அரியானாவின் அஞ்சலி ரதி 6-4, 4-6, 7-5 என்ற செட்களில் கர்நாடக வீராங்கனை சாய் ஜான்வியை வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி சுமார் மூன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. முதல் 2 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க கவுரவ செயலர் பிரேம் காரா, இணை செயலர் வெங்கட், இயக்குனர் ஜித்தன் ஜோஷி, இண்டியம் நிறுவன நிர்வாகிகள் ராம்குமார், விஜயபாலாஜி பங்கேற்றனர்.