தஞ்சை: தஞ்சையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டா மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல ரூ.90 கோடி செலவில் தூர்வாரப்படுகிறது.