சென்னை : தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது. ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரசு பள்ளியில் வழக்கமாக ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் தொடங்கப்படும் மாணவர் சேர்க்கை இந்தாண்டு மார்ச்சில் தொடங்கப்படுகிறது.