சென்னை : இன்று 15 கம்பெனி துணை ராணுவப்படையினர் தேர்தல் பணிக்காக தமிழ்நாடு வருகை தர உள்ளனர். மார்ச் 7-ம்தேதி 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் தமிழகம் வருவர்; ஒரு கம்பெனியில் 90 வீரர்கள் இருப்பர் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 கம்பெனி பாதுகாப்பு படைகள் கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.