தருமபுரி: தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையுடனும் வாழ கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முகாமை தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். மகளிர் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்ட தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. 1989-ல் கலைஞர் தொடங்கி வைத்த மகளிர் சுய உதவிக் குழு திட்டம் பல குடும்பங்களை முன்னேற்றியுள்ளது. நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் கலைஞர் என முதலமைச்சர் கூறியுள்ளார்.