சென்னை : கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தாலுகா அளவில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது; திட்டத்தில் தகுதியுடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.ரூ.1,000 யார் யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்களுக்கு உரிமைத் திட்ட தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.