கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் மாவட்ட அளவிலான வரதட்சணை ஒழிப்பு மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. பின்னர் அந்த அமைப்பின் மாநில தலைவர் சுலைமான் கூறுகையில்,‘இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏராளமான அடக்குமுறை சட்டங்களை ஒன்றிய பாஜ அரசு இயற்றிக் கொண்டிருக்கிறது. அது ஒருபுறம் இருக்க முஸ்லிம்களுடைய வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவற்றை அரசியலாக்கி முஸ்லிம்களுக்கும்,
இந்து மக்களுக்கும் மத்தியில் ஒரு வெறுப்புணர்வை விதைக்க கூடிய கேடுகெட்ட மோசமான அரசியலை ஒன்றிய பாஜ அரசு முன்னெடுக்கின்றது. பாஜ, அதனுடைய கூட்டணி கட்சிகள் அனைத்துமே சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரான அரசியலை தான் செய்கிறார்கள். இதனால் பாஜ கூட்டணியை ஆதரிக்கக் கூடாது. சிஏஏ சட்டத்தை கொண்டு வருவதற்கு அடிப்படை காரணமாக இருந்த அதிமுகவையும் ஆதரிக்கக்கூடாது என்ற நிலைபாட்டில் முஸ்லிம்கள் தெளிவாக இருக்கிறோம்,’ என்றார்.