இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் 24.86 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மாணவர்களிடையே கற்றல் இடைவெளியை குறைக்கவும் ‘இல்லம் தேடிக் கல்வி’ மற்றும் ‘எண்ணும் எழுத்தும்’ போன்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. இல்லம் தேடிக் கல்வி திட்டம் தன்னார்வலர்கள் மூலம் 1.65 லட்சம் மையங்களில் செயல்படுத்தப்பட்டு, மாநிலத்தில் 24.86 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்துள்ளனர்.