Friday, May 17, 2024
Home » ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறையில் அடைப்பு

ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் சிறையில் அடைப்பு

by Karthik Yash

சென்னை: திடீர் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, சிகிச்சை முடிந்து மீண்டும் புழல் அடைக்கப்பட்டார். மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாகத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 84 நாளாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று அதிகாலை திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு ரத்த அழுத்தமும் இருந்துள்ளது.

இதன் காரணமாக புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை 6 மணியளவில் சிறைக் காவலர்கள் ஆம்புலன்சில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். பின்னர் ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவருக்கு இதயம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். மேலும் கால் எதற்காக வீங்கியது, அதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். சிகிச்சையின்போது நடக்க முடியாத காரணத்தால் செந்தில் பாலாஜியை சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றனர்.

அவர் சிகிச்சை பெற்றபோது அவருடைய வழக்கறிஞர்கள் உடன் இருந்தனர். அப்போது அவரது உதவியாளர் மற்றும் கார் டிரைவர் அவரை பார்க்க வந்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் பரிசோதனையின் முடிவு வரும் வரை அவரை மருத்துவர்கள் அங்கேயே வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ அறிக்கையில் அவருக்கு பெரிதும் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு செந்தில் பாலாஜியை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து மீண்டும் புழல் சிறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து புழல் சிறையில் 3 மணியளவில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி திடீரென வந்து சென்றதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

4 + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi