Wednesday, May 15, 2024
Home » இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை; திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை; திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

by Kalaivani Saravanan

கொழும்பு: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 7ம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் 10 மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அச்சமயம் அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி ஒரு விசைப்படகை சிறைபிடித்தனர்.

மேலும் படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை திருகோணமலை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், சிறைக்காவல் முடிந்து இன்று இலங்கை திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 10 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 10 மீனவர்களும் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு தினங்களில் மீனவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

seventeen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi