ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு ராமநாதபுரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டது. மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை முதல் கடலுக்கு அடியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகள் அடங்கிய பார்சல் மீட்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டி பார்சலில் 4 முதல் 5 கிலோ எடை தங்கம் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.