சென்னை, மே 18: இன்று மற்றும் நாளை இரவு கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை பூங்கா ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று இரவு 9.30, 11.59 மற்றும் நாளை அதிகாலை 4.15 மற்றும் இரவு 9.30, 11.20, 11.40, 11.59, 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், நாளை மறுநாள் 20ம் தேதி காலை 4.15 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை மறுநாள் இரவு 10.40, 11.15, 11.20, 11.35, 11.40 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும், செங்கல்பட்டு – கடற்கரை இடையே இன்று இரவு மற்றும் நாளை இயக்கப்படும் ரயில் இரவு 11 மணிக்கு இயக்கப்படும் ரயில் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். மற்றும் செங்கல்பட்டு – கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் – கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கடற்கரை – செங்கல்பட்டு இடையே நாளை, நாளை மறுநாள் அதிகாலை 3.55 ,4.35 மணிக்கு இயக்கப்படும் ரயில் கடற்கரையிலிருந்து புறப்படாமல் எழும்பூரிலிருந்து புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.