Sunday, April 28, 2024
Home » தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை திறந்த பயணி: கைது செய்த போலீஸ்

தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை திறந்த பயணி: கைது செய்த போலீஸ்

by Nithya

சியோல்: தென்கொரியாவில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் கதவை பயணி திறந்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்கொரியாவின் டேகு நகரில் ஆசியானா ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று ஜேஜு தீவிலிருந்து புறப்பட்டு டேகு அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னரே பயணி ஒருவர் அதன் அவசர கதவைத் திறந்துவிட்டார்.

அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், மூச்சுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதால், ஒன்பது பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக டேகு தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், இந்த விமான கதவு எப்படித் திறந்தது என்பது குறித்து விசாரித்த போது, அவசரக்கால கதவின் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணி , அந்த கதவின் பிடியைத் தொட்டதால் இச்சம்பவம் நேர்ந்துள்ளதாக ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பின்னர், அவசரகால கதவை திறந்தவரை போலீஸ் கைது செய்தது.

You may also like

Leave a Comment

3 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi