கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 26) காலை தொடங்கியது. மலர்க் கண்காட்சியில் பூத்துக் குலுங்கும் மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த உருவங்கள், காய்கறி சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.