சென்னை: தனிநபர் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், Press, தலைமைச் செயலகம் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருந்தால் மே 2ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை விடுதிட்டுள்ளது. பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி காவல்துறை நடவடிக்கையில் இருந்து தப்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.