சென்னை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.