கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டனர். பட்டியலினத்தை சேர்ந்த 6 பேரும், மாற்று சமூகத்தை சேர்ந்த 7 பேரும் என 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.எஸ்.சி, எஸ்.டி பிரிவு உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணியின் போது தூசு பறந்ததாக ஏற்பட்ட தகராறு சம்பவம் ஜாதி கலவரமாக மாறியது.