மதுரை: இந்திய அளவில் சீர்மிகு நகரத்திற்கான CITIIS 2.0 திட்டத்திற்கு மதுரை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. இந்திய அளவில் தேர்வான 18 மாநகரங்களில் தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மதுரை மாநகராட்சிக்கு ரூ.135 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.