மும்பை: முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா முகாமில் இருந்து 22 எம்எல்ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக சாம்னா தெரிவித்துள்ளது. சாம்னா தலையங்கத்தில், \\”22 எம்எல்ஏக்கள் மற்றும் 9 எம்பிக்கள் முதல்வர் முகாமில் இருந்து வெளியேறும் மனநிலையை வளர்த்துக்கொண்டுள்ளனர். சிவசேனா எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் செய்து பாஜவுடன் கைகோர்த்தனர். ஆனால் ஒரு ஆண்டுக்குள் அவர்களது காதல் உறவு கசந்து விவகாரத்து குறித்து பேச்சுக்கள் எழுந்துள்ளன\\” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.