டெல்லி: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வழக்கை உடனடியாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி முன்பு மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் முறையீடு செய்தார்.
வழக்கை நாளைக்குள் விசாரிக்காவிட்டால் மனு அர்த்தமற்றதாகி விடும் என்று கபில்சிபல் விளக்கம் அளித்தார். கபில்சிபல் வேண்டுகோளை ஏற்று செந்தில் பாலாஜி வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உடனடியாக விசாரிக்க அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா கோரிக்கை விடுத்துள்ளார்.