Friday, May 17, 2024
Home » வாடகை செலுத்தாத கடைக்கு சீல்: கோயில் அறங்காவலர் குழு அதிரடி

வாடகை செலுத்தாத கடைக்கு சீல்: கோயில் அறங்காவலர் குழு அதிரடி

by Ranjith

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் புகழ்பெற்ற பழமையான மனோன்மணிகை அம்மன் சமேத ஸ்ரீ இரட்டைதாலீஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோயிலுக்கு சொந்தமாக 50 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்ருதீன் (47) என்பவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார்.

அவருக்கு கோயில் அறங்காவலர் குழு சார்பில், பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் வாடகை பணத்தை முறையாக செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கோயிலுக்கு சொந்தமான கடையை தனது உறவினருக்கு பக்ருதீன் விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.தகவலறிந்து கோயில் அறங்காவலர் குழுவினர் நேற்று முன்தினம் காலை பக்ருதீனின் கடைக்கு சீல் வைத்தனர். உடனே அந்த சீலை அவர் அகற்றியதாக கூறப்படுகிறது. மாலை போலீஸ் பாதுகாப்புடன் பக்ருதீனின் கடைக்கு மீண்டும் சீல் வைத்தனர்.

You may also like

Leave a Comment

fifteen + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi