வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர். நான் வெற்றி பெற்று வந்து காடு, மலைகளை, காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன். காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன். என்னை எம்பி ஆக்கி அனுப்பி வைத்தால், கடல் நீரை சுத்தப்படுத்தி, அதை மது தயாரிக்க ஆலைக்கு அனுப்ப நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன்.
8 வழிச் சாலையை அமைத்தால் தலையை வெட்டுவேன் என்று தெரிவித்தேன். அதற்காக என்னை தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள். அதையும் பார்த்துவிட்டேன். இப்போது அரசியலை பார்க்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். பகல் 12 மணியளவில் கடும் வெயிலில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் பேச்சை வேடிக்கை பார்க்க கூட யாரும் வரவில்லை. தன்னந்தனியே பிரசார வாகனத்தில் சென்ற அவர் பாட்டிலில் இருந்த தண்ணீரை தென்னை ஓலை பந்தல் மீது ஊற்றியபடி சென்றார். இதனை பார்த்ததும் கடைகளில் இருந்தவர்கள் இந்த வில்லன் நடிகரின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லையா என கலாய்த்தனர்.