சேலம்: சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1.75கோடி அபராதம் விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை முறையாக உரமாக்காமல், தீ வைத்து கொளுத்தியதால் மாசு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.