சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறு காரணமாக புதுமண தம்பதி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்றிரவு, அபிராமி கிணற்றில் குதிக்க, காப்பாற்றுவதற்காக கணவர் அருள் முருகனும் குதித்தார். இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் சடலங்களை மீட்டனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.