Monday, May 13, 2024
Home » ரூ.96 லட்சம் முறைகேடு 2 துணை பிடிஓ சஸ்பெண்ட்

ரூ.96 லட்சம் முறைகேடு 2 துணை பிடிஓ சஸ்பெண்ட்

by Dhanush Kumar

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உட்பட்ட எஸ்.மேட்டுப்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வரும் புஷ்பநாதன், போலி பில்கள் மூலம் பஞ்சாயத்து நிதியை முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உரிய விசாரணை நடத்திட உத்தரவிட்டார். அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் 2018 முதல் அவர் பணியாற்றிய கால கட்டத்திலான கணக்கு விவரங்களை சரிபார்த்தனர். அதில், ஊராட்சியின் மின்கட்டண நிதி, 9வது நிதிக்குழுவில் ஒதுக்கிய நிதி, வளர்ச்சி நிதி உள்ளிட்ட பல வகையில் ரூ.96 லட்சம் முறைகேடு செய்து, தனது வங்கி கணக்கில் செலுத்தியது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாயத்து கிளர்க்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்து கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இந்த ஊராட்சிகளுக்கு பொறுப்பு அதிகாரியாக விளங்கிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம், தணிக்கை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாலா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும், பஞ்சாயத்து கிளர்க்கின் முறைகேடுகளை கவனிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டப்பட்டு இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

ten − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi