சேலம்: ரூ. 50 லட்சம் லஞ்சம் கேட்ட புகாரில் மகுடஞ்சாவடி ஊராட்சித் தலைவரின் கணவர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்து அலுவலக உதவியாளர் ஆனந்தனையும் லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டு மனைகளுக்கு ஊராட்சி அனுமதி தர ரூ. 50 லட்சம் லஞ்சம் கேட்டு ரூ. 5 லட்சம் முன்தொகை பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.