சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் எந்த பலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. துறைஇல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பதை முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.