மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று விவசாயி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வருணா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா போட்டியிடுகிறார். இங்கு பாஜ சார்பில் அமைச்சர் வி.சோம ண்ணா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
வருணா தொகுதி சித்தராமையா பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில், வருணா தொகுதியில் சித்தராமையாவை தோற்கடித்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று விவசாயி ஒருவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது விவசாய நிலத்தை விற்று இப்பரிசை தருவதாக அவர் கூறியுள்ளார். கருத்து கணிப்புகள் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருக்க விவசாயி இப்படி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.