சண்டிகர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் தொழிலதிபர் ராபர்ட் வதேரா. இவர் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் அரியானாவில் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, டிஎல்எஃப் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ராபர்ட் வதேரா, பூபிந்தர் சிங் ஹுடா மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, ராபர்ட் வதேரா டிஎல்எஃப் நிறுவனத்துக்கு நிலத்தை மாற்றியதில் எந்த விதிமீறல்களும் கண்டறியப்படவில்லை என்று அரியானா அரசு தெரிவித்துள்ளது.
ராபர்ட் வதேரா டிஎல்எஃப் நில ஒப்பந்தத்தில் விதிமீறல் இல்லை
previous post