சென்னை: நிதிக் கல்வியறிவு வாரத்தை முன்னிட்டு, பிப்ரவரி 26 முதல் மார்ச் 1 வரை, பள்ளி மாணவர்கள் இந்திய ரிசர்வ் வங்கியில் உள்ள நிதிக் காட்சியகத்தைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டில் வங்கி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது, அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளின் நம்பகத்தன்மை எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் குறித்து மாணவர்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.