புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சங்கம் விடுதி ஊராட்சி பட்டியலின பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குடிநீர் தொட்டியை முறையாக சுத்தம் செய்யவில்லை என ஊராட்சி செயலர், ஆபரேட்டருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.