புதுச்சேரி: புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் சிறுமியின் பெற்றோர் சந்தித்தனர். பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.