சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக மாநில பொதுச்செயலாளர் குருசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் திறன் மிகு உதவியாளர்களில் டிப்ளமோ பொறியியல் கல்வித் தகுதியுள்ளவர்களுக்க இளநிலை வரை தொழில் அலுவலர் மற்றும் இளநிலை பொறியாளர் பதவி உயர்வு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் தகுதியுள்ளவர்கள் துறையில் இருந்தும் பதவி உயர்வு வழங்காமல் நேரடி நியமனம் மட்டும் நடந்துள்ளது. உரிய நேரத்தில பதவி உயர்வு வழங்காததால் அடுத்த பதவி உயர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வரும் 31ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் முறையீடு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.