சென்னை: மார்ச் 4ம் தேதி கல்பாக்கம் மற்றும் சென்னை நந்தனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவரை தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறேன். நாளை மக்களவை தேர்தலில் கட்சி தலைமை போட்டியிட சொன்னால், அந்த பணியை செய்வேன் இவ்வாறு கூறினார்.