ராஜஸ்தான்: 1.25 லட்சம் பிரதமர் கிசான் கேந்திரா மையங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் கிஷான் திட்டத்தின் கீழ் 8.5கோடி விவசாயிகளுக்கு 14வது தவணையாக ரூ.17,000 கோடி பிரதமர் வழங்கினார். ராஜஸ்தான் சிகார் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்துவைத்து, அடிக்கல் நாட்டினார். சல்பர் பூசப்பட்ட புதிய வகை இரசாயன உரமான யூரியா கோல்ட்-ஐ பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.