திருவள்ளூர்: பொன்னேரி அருகே இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் சடலமாக கிடந்தார்.
இது குறித்த விசாரணையில் அடையாளம் தெரியாத நபருக்கு பின்னே கிருஷ்ணாபுரம் மேட்டுகாலணியை சேர்ந்த இதயராஜ் நடந்து சென்றது தெரியவந்தது. அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இறந்த நபரின் செல்போன் இதயராஜிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இறந்த நபர் பெரியபாளையத்தை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. இதயராஜிடம் மேற்கொண்ட விசாரணையில் சாலையில் சென்று கொண்டிருந்த பாபுவை பின்தொடர்ந்து செல்போன் மற்றும் ரூ.500 வழிப்பறி செய்து கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததை இதயராஜ் ஒப்புக்கொண்டார்.
மேலும் இதயராஜ் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் இழுபறியில் உள்ளதும் தெரியவந்துள்ளது. கலை செய்யப்பட்ட பாபுவின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வழிப்பறி செய்து கொலையை அரங்கேற்றியதாக கொள்ளையன் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர்.