சென்னை: அதிமுகவில் இருந்து என்னை மட்டுமல்ல, யாரையும் பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி எங்களை பிரிக்க நினைக்கிறார்கள், அது நடக்காது. நான் உள்பட ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நிற்கிறோம் என எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.