உதகை: போக்சோ வழக்கில் தீர்ப்பு அளித்ததை கேட்டு மகளிர் நீதிமன்றத்திலேயே விஷம் குடித்த முதியவரால் பரபப்பு ஏற்பட்டது. குன்னூரை சேர்ந்த முதியவர் தம்பா, 2022-ல் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.