வேலூர்: வேலூர் அருகே நடை பெற்ற பாஜக கூட்டத்தில் உணவருந்த சென்ற நிர்வாகிகள் தடுக்கப்பட்டதால் வாக்குவாதம் காரணமாக சலசலப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த ரங்கா புறத்தில் உள்ள மண்டபத்தில் பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் கட்சியின் தேசிய துணை தலைவருமான சிவராஜ் சிங் சௌகான் வர தாமதமானது.
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மதிய உணவு அருந்த சென்றனர். ஆனால் சாப்பிடத்தான் வந்தீர்களா என்று ஒலிபெருக்கியில் நிர்வாகி ஒருவர் கடிந்து கொண்டதால் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆத்திரமடைந்து கூச்சல் எழுப்பினர். கேள்வி எழுப்பியவர் அவர்களை சமாதான படுத்தினார். உணவு கூடத்தை பூட்டிவைத்து தங்களை அவமானப்படுத்தியதாக சில பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். மேலும் நீரிழிவு தொல்லை உள்ளவர்கள் சரியான நேரத்தில் சாப்பிடமுடியாமல் அவதிபட்டதாகவும் அவர் கூறினர்.