ஐதராபாத்: தொலைபேசியை ஒட்டுக்கேட்பு வழக்கில் ஐதராபாத் மாஜி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். தெலங்கானாவில் சந்திரசேகரராவ் முதல்வராக இருந்த போது தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தகவல்களை இரண்டு கூடுதல் எஸ்பிக்கள் அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்த முன்னாள் துணை போலீஸ் கமிஷனர் ராதாகிஷன்ராவ் எதிர்க்கட்சித் தலைவர்களின் போன்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.