சேலம்: சேலம் பெரியார் பல்கலை கழக பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தி நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பல்கலை கழக ஆசிரியர் மற்றும் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது. பல்கலை கழக பதிவாளரை துணைவேந்தர் இன்றைக்குள் சஸ்பெண்ட் செய்யாவிட்டால் நாளை முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று மாலை பொதுக்குழுவை கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.