இந்தியாவின் மிக நீளமான குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது கேபிள் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். துவாரகாவில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் ஆலயத்திலும் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். மேலும் துவாரகா சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதியிடமும் பிரதமர் மோடி ஆசிபெற்றார்.முன்னதாக துவாரகா நகரத்தின் ஆழ்கடல் பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தண்ணீரில் தவம் செய்தார்.