Thursday, May 16, 2024
Home » 420 வேலை செய்தவர்கள் தான் 400 குறித்து பேசுகின்றனர்: மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்

420 வேலை செய்தவர்கள் தான் 400 குறித்து பேசுகின்றனர்: மோடியை விமர்சித்த பிரகாஷ் ராஜ்

by Ranjith

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டியில், ‘420 (மோசடி குற்றத்திற்கு பயன்படுத்தப்படும் சட்டப் பிரிவு) வேலைகளை செய்தவர்கள்தான் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்று பேசுவார்கள். ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது சாத்தியமில்லை’ என்றார். முன்னதாக கடந்த பிப். 5ம் தேதி பேசிய பிரதமர் மோடி, ‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

எங்களது மூன்றாவது ஆட்சிக் காலம் வெகு தொலைவில் இல்லை. காங்கிரஸ் தலைவர் கார்கே கூட, நாங்கள் 400 இடங்களில் வெல்வோம் என்று கூறினார்’ என்று பேசினார். அதேபோல் பல இடங்களில் பேசும் மோடி, தங்களது கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று தொடர்ந்து கூறி வருவதால், அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

two × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi