ஷிவமொக்கா: கா்நாடக மாநில பாஜ மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தனது மகன் காந்தேஷூக்கு சீட் கேட்டிருந்தார். இவரது மகனுக்கு சீட் மறுக்கப்பட்டுவிட்டது. இதனால் விரக்தியடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்காவில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து சுயேட்சையாக நிற்கப்போவதாக அறிவித்துள்ளார். ஷிவமொக்காவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் ஈஸ்வரப்பா பங்கேற்கவில்லை.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ‘ ஈஸ்வரப்பாவின் மகன் காந்தேஷுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு நான் காரணம் அல்ல. மகனுக்கு சீட் கிடைக்காததால் ஈஸ்வரப்பா என் மீது கோபமாக இருக்கிறார். அவருக்கு என்னைப் பற்றி தவறான எண்ணம் தோன்றிவிட்டது. பாஜவை கட்டியெழுப்புவதில் அவர் முக்கிய பங்கு வகித்தவர். அவரை சமாதானப்படுத்துவோம். என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்’ என்றார்.