பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம், ஹொசபேட்டை நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் விஜயநகர் மாவட்டம், ஹரப்பனஹள்ளி தாலுகா, கொலஹள்ளி கிராமத்தில் உள்ள பழமையான கோணிபசவேஷ்வரசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தபின் காரில் வீடு திரும்பினர்.
அவர்கள் பயணம் செய்த கார் ஹொசபேட்டை தாலுகா, வியாசனகேரி கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலைகளில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வேகமாக வந்த லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் பள்ளத்தில் விழுந்த காரில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.