திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் நாளை, நாளை மறுநாள் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. பக்தர்கள், படிப்பாதை மற்றும் வின்ச் சேவையை பயன்படுத்தி மலைக்குச் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.