பெங்களூரு: கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாஜ தொண்டர் ஒருவரை கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கர்நாடகாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசேன் வெற்றி பெற்றதையடுத்து, சட்டசபையில் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.
இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த வழக்கில் எம்பி சையது நசீர் உசேனை நான்காவது குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கோரினார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு, மாண்டியாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாஜ தொண்டர் ரவி என்பவரை போலீசார் கைது செய்தனர். அரசியலுக்காக இந்த சம்பவத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ குற்றம் சாட்டி உள்ளது.