மதுரை: மதுரை சிறையில் விசாரணை கைதி கொல்லப்பட்டதற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த திருச்செல்வி என்பவர் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிசிஐடி அறிக்கை அடிப்படையில் இழப்பீடு வழங்குவது குறித்து 12 வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியருக்கு ஆணையிட்டுள்ளது.