டெல்லி: வளர்ச்சியை நோக்கி இந்தியா முன்னேறிவருகிறது. ஊழலில் ஈடுபடுபவர்கள் வேரறுக்கப்பட்டு வருகிறார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 20 ஆயிரம் கிலோ மீட்டர் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே ரோஜ்கர் மேளா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த முயற்சித்து வருவதாகா 71,000 பேருக்கு காணொலிக்காட்சி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.