டெல்லி: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால், திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாக கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதில் கூறியுள்ளது.